விடுகதைகள் விடைகளுடன்
- படபடக்கும், பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன?
- தலையில் கிரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன?
- நிலத்தில் முளைக்காத செடி நிமிர்ந்து நிற்காத செடி அது என்ன?
- எவ்வளவு ஓடினாலும் எனக்கு வியர்வை வராது. வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது அது என்ன?
- கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்?
- கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?
- கடிபடமாட்டான் பிடிபடமாட்டான். அவன் யார்?
- இளமையில் பச்சை, முதுமையில் சிகப்பு, குணத்திலே எரிப்பு. விடை தெரியுமா?
- மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து பிடித்திருப்பவர்களைக் காப்பாற்றும் என்னை இந்த இளம் பெண்கள் அழகுக்காகப் பிடித்துக் கொள்கிறார்கள். நான் யார்?
- நீரிலும் வாழ்வேன், நிலத்திலும் வாழ்வேன். நீண்ட ஆயுள் உடைய எனக்கு இறைவன் கொடுத்த கவசமும் இருக்கு. விடைதெரியுமா?
- வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
- முழு உலகமும் சுற்றி வரும், ஆனால் ஒரு மூலையிலேயே இருக்கும் அது என்ன?
- மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்?
- ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன், ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவேன், நான் யார்?
- கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை, வாங்கியவனும் உபயோகிக்கவில்லை, உபயோகிப்பவனுக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது அது என்ன?
- ஒரு குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனை உண்டு, ஆனால் குற்றத்தை செய்தால் தண்டிக்க முடியாது, அக் குற்றம் என்ன?
- 3. முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது! – அது என்ன?
- வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை
கிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும் இல்லை
வலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை – அவன் யார்? - கருப்பு நிறமுடையவன்
கபடம் அதிகம் கொண்டவன்
கூவி அழைத்தால் வந்திடுவான்
கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்? - கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள் காஞ்சியில் நான் யார்?
- இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
- எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
- நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான் அவன் யார்?
- பச்சைபெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள். அது என்ன?
- உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?
- வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
- காதை திருகினால் பாட்டு பாடுவான்? அவன் யார்?
- உடம்பெல்லாம் பல் கொண்ட ஒருத்திக்கு கடிக்க தெரியாது?
- என்னைத் தெரியாத போது தெரிந்து கொள்ளும் ஆவல்.
தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை.
நான் மறைக்கப்பட வேண்டியவன். நான் யார்? - நான் இருந்ததில்லை ஆனாலும் இருப்பவனாக இருப்பேன்.
என்னை யாரும் பார்த்ததில்லை பார்க்கும் முன் பழசாயிருப்பேன்
என்னை நம்பியே இந்த உலகமும் ,மக்களும் நல்லது நடக்குமென நான் யார்? - எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
- கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது?
- மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது. அது என்ன?
- செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன?
- கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன?
- ஓவென்று உயர்ந்த மலை, நடுவே உடன் பிறப்பு இருவர் ! ஒருவரை மற்றவர் பார்ப்பதுமில்லை; பேசுவதும் இல்லை. அவர்கள் யார்?
- கருப்பர்கள் மாநாடு போட்ட இடத்தில் கண்ணீர் பிரவாகம். அது என்ன?
- காட்டிலே பச்சை; கடையிலே கறுப்பு; வீட்டிலே சிவப்பு. அது என்ன?
- கிட்ட இருக்கும் பட்டணம்;எட்டித்தான் பார்க்க முடியவிலை. அது என்ன?
- கீழேயும் மேலேயும் மண்; நடுவிலே அழகான பெண். அது என்ன?
- குண்டுச் சட்டியில் கெண்டை மீன்.அது என்ன?
- கூட்டுக்குள் குடியிருக்கும் குருவி அல்ல; கொலை செய்யும்; பாயும்; அது வீரனுமல்ல. அது என்ன?
- கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அது என்ன?
- கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?
- கோவிலைச் சுற்றிக் கருப்பு; கோவிலுக்குள்ளே வெளுப்பு. அது என்ன?
- இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
- இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
- உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?
- ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?
- உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?
- கூரை வீட்டைப் பிரிச்சா..ஓட்டுவீடு! ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை!வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம்!அது என்ன
- நீண்ட உடலிருக்கும் தூணும் அல்ல ,உடலில் சட்டை இருக்கும் ஆனால் உயிர் இல்லை,துயிலில் சுகம் இருக்கும் மெத்தை அல்ல அது என்ன?
- தலை போனால் மறைக்கும் இடை போனால் குரைக்கும் கால் போனால் குதிக்கும் மூன்றும் ஒன்று சேர்ந்தால் முந்தி ஓட்டம் பிடிக்கும். அது என்ன?
- தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
- முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கை தேவை?
- பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?
- அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
- ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
- நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில் பெண்கள் விருப்பம், அது என்ன?
- தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?
- உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
- ஐவர் வீட்டுக்கும் பொதுவாய் ஒரு முற்றம். அவர்கள் யார்?
- அரைசாண் ராணிக்கு வயிற்றில் ஆயிரம் முத்துகள். அது என்ன?
- ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை அது என்ன ?
- ஓடையில கருப்பு மீனு துள்ளி விளையாடுது அது என்ன ?
- பூவோடு பிறந்து; நாவோடு கலந்து விருந்தாவான் மருந்தாவான். அவன் யார்?
- முத்துக் கோட்டையிலே மகாராணி சிறைபட்டிருக்கிறாள். அவள் யார்?
- காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
- பிறக்கும்போது வால் உண்டு; இறக்கும்போது வால் இல்லை. அது என்ன?
- எடுக்க எடுக்க வளரும். எண்ணெயைக் கண்டால் படிந்துவிடும். அது என்ன?
- ஓய்வு எடுக்காமல் இயங்கும். ஓய்வு எடுத்துவிட்டால் மறுபடியும் இயங்காது. அது என்ன?
- இருந்த இடத்தில் நகர்ந்தபடி இரவும் பகலும் செல்வான். அவன் யார்?
- பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. அது என்ன?
- பூ பூக்கும். காய் காய்க்கும். ஆனால் பழம் பழக்காது. அது என்ன?
- மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார்?
- உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?
- காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான் அவன் யார்?
- நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்?
- அம்மா போடும் வட்டம்,பளபளக்கும் வட்டம்,சுவையைக் கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன இஸ்டம். அது என்ன?
- ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன?
- வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. அது என்ன?
- அண்ணனின் தயவால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?
- குண்டன் குழியில் விழுவான், குச்சியப்பன் தூக்கி விடுவான் – அது என்ன?
- இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
- பல் துவக்ககாதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்?
- ஊரெல்லாமல் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஒய்வு அது ?
- உங்களுக்கு சொந்தமானத ஒன்று…..ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?
- உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன?
- ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன?
- எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன?
- வீட்டிலிருப்பான் காவலாலி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்?
- மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
- பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை. அது என்ன?
- விரல் இல்லாமலே ஒரு கை. அது என்ன?
- இவனும் ஒரு பேப்பர் தான்; ஆனால், மதிப்போடு இருப்பான். அது என்ன?
- இது ஒரு பூ. முதற்பகுதி ஆதவனின் மறுபெயர்; பிற்பகுதி தேசத் தந்தையை குறிக்கும். அது என்ன?
- ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல்படி. அது என்ன?
- ஓடுடுப்பான்! பிச்சை, ஒரு நாளும் கண்டறியான்!
காடுறைவான்! தீர்த்தக்கரை சேர்வான்! – தேட
நடக்குங்கால் நாலுண்டு!நல்தலை ஒன்றுண்டு!
படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன? - வட்ட வட்ட நிலவில் வரைஞ்சிருக்கு; எழுதியிருக்கு. அது என்ன?
- சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார்
- அரிவாளால் வெட்டி வெட்டி அடுப்பிலே வெச்சாலும் மூச்சே விட மாட்டான். அவன் யார்?
- இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
- ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?
- உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?
- இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
- எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள், அவள் யார்?
- பார்க்கத்தான் கறுப்பு; ஆனால் உள்ளமோ சிவப்பு. நமக்குத் தருவதோ சுறுசுறுப்பு அது என்ன?
- பார்க்க அழகு பாம்புக்கு எதிரி அது என்ன?
- நடந்தவன் நின்றான் கத்தியை எடுத்து தலையைச் சீவினேன் மறுபடியும் நடந்தான் அவன் யார்?
- மேலே ஏறிச்செல்லும்:விமானம்
அல்ல, தண்ணீர் உண்டு ;குளமும்
அல்ல . அது என்ன? - வரும் போது வெண்சிகப்பு!
வளர வளர தகதகப்பு !
போகும் போது கடும் சிகப்பு !
அது என்ன? - அட்டைக்கரிப் பெண்ணுக்கு உச்சந்தலை
மஞ்சள் அது என்ன? - ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது. அது எது?
- கடல் நீரில் வளர்ந்து நல்ல
நீரில் மடிவது என்ன? - முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?
- பாதாளத்திலிருந்து அரண்டு வேதாளம் வருகிறது – அது என்ன?
- வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?
- தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம்
சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்? - குண்டுச் சட்டியில் கெண்டை மீன், அது என்ன ?
- ஓடியாடி உழைத்தும், மூலைதான் இவன் இருப்பிடம் அது என்ன?
- எவ்வளவு முன்னேறுகிறீர்களோ அவ்வளவு விட்டுச் செல்வீர்கள். அது என்ன?
- என்னால் ஓட முடியும், ஆனால் நடக்க முடியாது; எப்போதாவது பாடுவேன், ஆனால் பேச முடியாது; கைகள் உண்டு, ஆனால் விரல்கள் கிடையாது; தலையில்லை, ஆனால் முகம் உண்டு; நான் யார் தெரியுமா?
- ஒரு மழை பெய்தாலே பல குடை வந்துவிடும் அது என்ன ?
- வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ அது என்ன?
- வாலால் நீர் குடிக்கும்,வயால் பூச்சொரியும் அது என்ன?
- பறக்கும். ஆனால் பறந்து போகாது. அது என்ன?
- மாவில் பழுத்த பழம். மக்கள் விரும்பும் பழம். அது என்ன?
- மட்டை உண்டு, கட்டை இல்லை. பூ உண்டு, மணம் இல்லை. அது என்ன?
- தண்ணீரோடு போகும் கல் எது?
- மருத்துவர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு அவர் யார்?
- தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன?
- காட்டில் கிடைத்த கட்டை கான மழை பொழிகிறது. அது என்ன?
- சிவப்பு ரோஜா மலர்ந்தால் வெள்ளை மலர்கள் தெரியும். அது என்ன?
- தலையில் கிரீடம் வைத்த தங்கப்பழம். அது என்ன?
- கையில்லாமல் நீந்துவான், கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?
- தரையில் முட்டி விடும்; விரலில் ஒட்டி விடும். அது என்ன?
- சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
- ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன?
- உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன?
- இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
- காவி உடை அணியாதக் கள்ளத் தவசி கரையோரம் கடும் தவம் செய்கிறான் – அவன் யார்?
- காண உருவம் உண்டு கட்டிப்பிடிக்கத்தான் உடல் இல்லை -அது என்ன?
- விதையில்லாத செடி இது மழையில் பிறந்து வெயிலில் காயுது. – அது என்ன?
- இரவல் கிடைக்காதது இரவில் மட்டும்தான் வரும். -அது என்ன?
- பறந்து போகும் விமானம் அல்ல படீரென வெடிக்கும் பட்டாசும் அல்ல. -அது என்ன?
- குழந்தைக்குப் பலமான கையே இந்தக் கைதான். – அது என்ன?
- வாயில்லை புத்திமதிகள் சொல்வான், காலில்லை கடந்தும் செல்வான், கையில்லை உளங் காட்டிக் கொள்வான், உயிரில்லை ஒரு நாளும் சாக மாட்டான். – அது என்ன?
- கனலைப் பிடித்து கண்ணீர் வடிக்கும், கடைசியில் கரைந்தும் போகும் – அது என்ன?
- மேலே பறக்கும் பருந்தல்ல, கட்டுண்டு இருக்கும் மாடல்ல
அழகான வாலுண்டு குரங்குமல்ல – அது என்ன? - ஊர் உண்டு மக்களில்லை, மலையுண்டு மரங்களில்லை, ஆறுண்டு நீரில்லை, அணையுண்டு கல்லில்லை, வழி உண்டு வாகனமில்லை, வண்ணமுண்டு உயிரே இல்லை – அது என்ன?
- குடிக்கத் தண்ணீர் உண்டு, குளிக்கத் தண்ணீர் இல்லை – அது என்ன?
- மனிதன் போடாத பந்தலிலே, மலர்ந்து கிடைக்குது பூ – அது என்ன?
- காலும் கையும் உண்டு, விரல் இல்லை, முதுகு உண்டு, தலை இல்லை, தன்னைத் தேடி வந்தோரைச் சுமப்பான். – அது என்ன?
- எந்தச் சாவியாலும் திறக்க முடியாது, எந்தச் சுத்தியாலும் உடைக்க முடியாது?
- ஆற்றைக் கடக்கும், அக்கரை போகும், தண்ணீரில் கலக்காது, தானும் நனையாது – அது என்ன?
- வெயிலில் காயும், மழையில் நனையும், அண்டி வருவோர்க்கு, அடைக்கலமும் தரும் – அது என்ன?
- யாரும் செய்யாத கதவு, தானே திறக்கும் தானே மூடும் – அது என்ன?
- அழகான சின்னப் பெட்டி சத்தமிடும், சின்னப் பெட்டி தொட்டுக் காதில் வைத்து, விட்டால் பேச்சுச் சத்தம் கேட்கும் பெட்டி அது என்ன?
- எதிரில் ஒரு திரை எதையும் காட்டும் திரை விரலாலே வாசிக்க விடைதரும் திரை வியக்கும்படி எல்லாமே வழங்குகின்ற திரை?
- வரி வரியாய் கறுப்பு முத்து கையிலே வராத முத்து கண்ணிரண்டால் எடுத்து மனதால் மகிழ்ந்த முத்து அது என்ன?
- ஒட்ட வைத்த பம்பரம் இறக்கை வைத்த பம்பரம்
சுற்றிச் சுற்றி சுகமளிக்கும் அழகான பம்பரம். அது என்ன? - ராகத்துடன் பாடி வருவார் ராத்தூக்கம் கெடுப்பார். அவர் யார்?
- நீந்தத் தெரியும் மீனில்லை நடக்கத் தெரியும் மனிதனும் இல்லை இறக்கை இருந்தும் பறக்காத பறவை நான் யார் தெரியுமா?
- கறுப்பு நிறத்துக்குச் சொந்தக்காரன் கலகல பேச்சுக்காரன் ஒருவருக்குத் துயர் என்றால் ஊரையே அழைப்பான். அவன் யார்?
- பறக்கும் இது பறவை இல்லை. ஆனால் இது அடையாளம் காட்டிக் கொடுத்து விடும். அது என்ன?
- விழுந்தால் இது படுக்காது, நிமிர்ந்து எழுந்தால் நிற்காது. இது என்ன?
- தாகம் போக்கும் தண்ணீர் இல்லை. களைப்பைப் போக்கும் மருந்தும் இல்லை. சண்டைக்குச் செல்லும் இது ஆயுதமும் இல்லை. இது என்ன?
- தொட்டால் மணக்கும் கடித்தால் புளிக்கும். அறுத்துப் பிழிந்து தண்ணீர், சர்க்கரை சேர்த்து விட்டால் அடடா, சூப்பர் என்பார். யார் இது?
- முதுகில் சுமை தூக்கி முனங்காமல் வருவான். மூச்சும் திணறாது, முகமும் கோணாது. அவன் யார்?
- ஒன்பது பிள்ளையானாலும் ஒரே குடுமிதான் எங்களுக்கு நாங்கள் யார்?
- கடிக்காத புலி, கால் இல்லாப் புலி, உறுமாத புலி உருமாறும் புலி – அது என்ன?
- செடியில் விளையாத பஞ்சு, தறியில் நூற்காத நூல், உடுத்த முடியாத உடை- அது என்ன?
- வெறும் காற்றில் பருத்தவன், வரும்காற்றில் பறப்பான் – அது என்ன?
- படுத்திருக்கும் பெருநாகம், படம் எடுக்காத கருநாகம் – அது என்ன?
- ஒட்டுத் திண்ணையில் பட்டுப்பாவாடை-அது என்ன?
- கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள் காஞ்சியில் நான் யார்?
- பாடி பாடி அழைக்கும்,தேடி யாரும் செல்வதில்லை. அது என்ன?
- காட்டின் நடுவிலெ ஒரு பாதை. அது என்ன?
- ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல். அது என்ன?
- அண்ணனின் தயவால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?
- ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?
- பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும், தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன?
- பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
- பிறக்கும் போது வால் உண்டு; இறக்கும் போது வால் இல்லை. – அது என்ன?
- பச்சை கதவு, வெள்ளை ஜன்னல், திறந்தால் கருப்பு ராஜா – அது என்ன?
- காற்றால் உயிர் பெறும், காதுக்கு இனிமை தரும்- அது என்ன?
- ஊரெல்லாம் வம்பளப்பான்; ஓர் அறையில் அடங்குவான். அவன் யார்?
- ஆனை விரும்பும், சேனை விரும்பும்; அடித்தால் வலிக்கும், கடித்தால் இனிக்கும். அது என்ன?
- தண்ணீரில்லாத பொட்டலிலே தாவிச் செல்லும் கப்பல் எது?
- காம்பு இல்லாத வட்ட இலை – அது என்ன?
- பெயர்தான் பேப்பர்; ஆனால், செய்தி ஒன்றும் இருக்காது. யார் அவன்?
- தண்ணீரில் விரிக்கும் ஓட்டைப் பாய் – அது என்ன?
- தலை சாய்க்க மடி தருவான் பஞ்சு நண்பன் – அது என்ன?
- தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள் அது என்ன?
- சொன்னதைச் சொல்லும் பொண்ணுக்கு, பச்சைப் பாவாடை கேட்குதாம் அது என்ன?
- காலையில் ஊதும் சங்கு, கறி சமைக்க உதவும் சங்கு அது என்ன?
- காலைக்கடிக்கும் செருப்பல்ல, காவல் காக்கும் நாயல்ல அது என்ன?
- கோணல் எத்தனை இருந்தாலும் குணமும் குறியும் மாறாது – அது என்ன?
- காற்று இல்லாத கண்ணாடிக் கூண்டில் மஞ்சக் கோழி மயங்கி கிடக்குது அது என்ன?
- மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன?
விடுகதைகள் – விடைகள்
- பட்டாசு
- அன்னாசிப் பழம்
- முடி
- நாய்
- தையல்காரர்
- படகு
- தண்ணீர்
- மிளகாய்
- குடை
- ஆமை
- சோளம்
- முத்திரை
- பஞ்சு
- நெருப்பு
- சவப்பெட்டி
- தற்கொலை
- குயில்
- சிலந்தி
- காகம்
- பட்டுத்துணி
- வாழை
- விக்கல்
- நாற்காலி
- வெண்டிக்காய்
- வெங்காயம்
- முட்டை
- வானொலிப்பெட்டி
- சீப்பு
- இரகசியம்
- நாளை
- விக்கல்
- உப்பு
- ஈசல்
- தொலைபேசி
- சோளக்கதிர்
- கண், மூக்கு.
- மேகம், மழை.
- மரம்-கரி-நெருப்பு.
- முதுகு.
- மஞ்சல்செடி.
- நாக்கு.
- அம்பு.
- படகு.
- பூரி.
- சோற்றுப்பானை-சோறு.
- சைக்கிள்
- பட்டாசு
- தராசு
- எறும்புக் கூட்டம்
- அஞ்சல் பெட்டி.
- தேங்காய்
- தலையணை
- குதிரை
- மீன் வலை
- ஆபத்து
- கண்கள்
- நிலா
- மூச்சு
- பட்டு
- ஒட்டகம்
- பாய்
- கை
- வெண்டிக்காய்
- தென்னை
- கண்
- தேன்
- நாக்கு
- சூரியன்
- தவளை
- முடி
- இதயம்
- கடிகாரம்
- வேர்கடலை
- தேங்காய்
- சிலந்தி
- அகப்பை
- தென்னை
- பென்சில்
- அப்பளம்
- கண்ணீர்
- செருப்பு
- சந்திரன்
- பணியாரம்
- தேள்
- சீப்பு
- சந்திரன்
- பெயர்
- தக்காளி
- கடல்
- மின் விசிறி
- பூட்டும் திறப்பும்
- விழுது
- வானொலி பெட்டி
- தும்பிக்கை
- பணம்
- சூரிய காந்தி
- மூக்கு
- ஆமை
- நாணயம்
- அலாரம்,கடிகாரம்
- விறகு
- சைக்கிள்,துவிச்சக்கரவண்டி
- எறும்பு
- தராசு
- வான வெடி
- செல்போன்/கைப்பேசி
- தேயிலை
- மயில்
February 27, 2018 1:42 pm
Super guys
June 22, 2019 9:41 am
கடுகு அளவு சாமிக்கு தேங்காய் அளவு சாம்பிராணிக்கு என்ற விடுகதைக்கு பதில்
January 11, 2020 6:59 am
பிரசாதம்
December 16, 2019 3:52 am
இல்லாத இட்லிக்கு இட்லி துணி இரண்டாயிரம் அது என்ன..?
Answer pls
March 25, 2020 11:51 am
நிலா – மேகம்
April 8, 2020 8:14 pm
Marimuthu
July 26, 2020 5:36 am
அருமையான பதிவு
April 3, 2021 6:37 am
விடுகதை :
உயிருடன் இருக்கையில் புதைக்க படுகிறது
இறந்த பின்பு எடுக்கப்படுகிறது அது என்ன