விடுகதைகள் விடைகளுடன்

விடுகதைகள் விடைகளுடன்

  1. படபடக்கும், பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன?
  2. தலையில் கிரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன?
  3. நிலத்தில் முளைக்காத செடி நிமிர்ந்து நிற்காத செடி அது என்ன?
  4. எவ்வளவு ஓடினாலும் எனக்கு வியர்வை வராது. வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது அது என்ன?
  5. கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்?
  6. கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?
  7. கடிபடமாட்டான் பிடிபடமாட்டான். அவன் யார்?
  8. இளமையில் பச்சை, முதுமையில் சிகப்பு, குணத்திலே எரிப்பு. விடை தெரியுமா?
  9. மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து பிடித்திருப்பவர்களைக் காப்பாற்றும் என்னை இந்த இளம் பெண்கள் அழகுக்காகப் பிடித்துக் கொள்கிறார்கள். நான் யார்?
  10. நீரிலும் வாழ்வேன், நிலத்திலும் வாழ்வேன். நீண்ட ஆயுள் உடைய எனக்கு இறைவன் கொடுத்த கவசமும் இருக்கு. விடைதெரியுமா?
  11. வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை  சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
  12. முழு உலகமும் சுற்றி வரும், ஆனால் ஒரு மூலையிலேயே இருக்கும் அது என்ன?
  13. மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்?
  14. ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன், ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவேன், நான் யார்?
  15. கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை, வாங்கியவனும் உபயோகிக்கவில்லை, உபயோகிப்பவனுக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது  அது என்ன?
  16. ஒரு குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனை உண்டு, ஆனால் குற்றத்தை செய்தால் தண்டிக்க முடியாது, அக் குற்றம் என்ன?
  17. 3. முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது! – அது என்ன?
  18. வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை
    கிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும் இல்லை
    வலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை – அவன் யார்?
  19. கருப்பு நிறமுடையவன்
    கபடம் அதிகம் கொண்டவன்
    கூவி அழைத்தால் வந்திடுவான்
    கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?
  20. கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள் காஞ்சியில் நான் யார்?
  21. இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
  22. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
  23. நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான் அவன் யார்?
  24. பச்சைபெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள். அது என்ன?
  25. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?
  26. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
  27. காதை திருகினால் பாட்டு பாடுவான்? அவன் யார்?
  28. உடம்பெல்லாம் பல் கொண்ட ஒருத்திக்கு கடிக்க தெரியாது?
  29. என்னைத் தெரியாத போது தெரிந்து கொள்ளும் ஆவல்.
    தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை.
    நான் மறைக்கப்பட வேண்டியவன். நான் யார்?
  30. நான் இருந்ததில்லை ஆனாலும் இருப்பவனாக இருப்பேன்.
    என்னை யாரும் பார்த்ததில்லை பார்க்கும் முன் பழசாயிருப்பேன்
    என்னை நம்பியே இந்த உலகமும் ,மக்களும் நல்லது நடக்குமென நான் யார்?
  31. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
  32. கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது?
  33. மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது. அது என்ன?
  34. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன?
  35. கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன?
  36. ஓவென்று உயர்ந்த மலை, நடுவே உடன் பிறப்பு இருவர் ! ஒருவரை மற்றவர் பார்ப்பதுமில்லை; பேசுவதும் இல்லை. அவர்கள் யார்?
  37. கருப்பர்கள் மாநாடு போட்ட இடத்தில் கண்ணீர் பிரவாகம். அது என்ன?
  38. காட்டிலே பச்சை; கடையிலே கறுப்பு; வீட்டிலே சிவப்பு. அது என்ன?
  39. கிட்ட இருக்கும் பட்டணம்;எட்டித்தான் பார்க்க முடியவிலை. அது என்ன?
  40. கீழேயும் மேலேயும் மண்; நடுவிலே அழகான பெண். அது என்ன?
  41. குண்டுச் சட்டியில் கெண்டை மீன்.அது என்ன?
  42. கூட்டுக்குள் குடியிருக்கும் குருவி அல்ல; கொலை செய்யும்; பாயும்; அது வீரனுமல்ல. அது என்ன?
  43. கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அது என்ன?
  44. கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?
  45. கோவிலைச் சுற்றிக் கருப்பு; கோவிலுக்குள்ளே வெளுப்பு. அது என்ன?
  46. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
  47. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
  48. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?
  49. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?
  50. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?
  51. கூரை வீட்டைப் பிரிச்சா..ஓட்டுவீடு! ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை!வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம்!அது என்ன
  52. நீண்ட உடலிருக்கும் தூணும் அல்ல ,உடலில் சட்டை இருக்கும் ஆனால் உயிர் இல்லை,துயிலில் சுகம் இருக்கும் மெத்தை அல்ல அது என்ன?
  53. தலை போனால் மறைக்கும் இடை போனால் குரைக்கும் கால் போனால் குதிக்கும் மூன்றும் ஒன்று சேர்ந்தால் முந்தி ஓட்டம் பிடிக்கும்.  அது என்ன?
  54. தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
  55. முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கை தேவை?
  56. பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?
  57. அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
  58. ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
  59. நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில் பெண்கள் விருப்பம், அது என்ன?
  60. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?
  61. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
  62. ஐவர் வீட்டுக்கும் பொதுவாய் ஒரு முற்றம். அவர்கள் யார்?
  63. அரைசாண் ராணிக்கு வயிற்றில் ஆயிரம் முத்துகள். அது என்ன?
  64. ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை அது என்ன ?
  65. ஓடையில கருப்பு மீனு துள்ளி விளையாடுது அது என்ன ?
  66. பூவோடு பிறந்து; நாவோடு கலந்து விருந்தாவான் மருந்தாவான். அவன் யார்?
  67. முத்துக் கோட்டையிலே மகாராணி சிறைபட்டிருக்கிறாள். அவள் யார்?
  68. காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
  69. பிறக்கும்போது வால் உண்டு; இறக்கும்போது வால் இல்லை. அது என்ன?
  70. எடுக்க எடுக்க வளரும். எண்ணெயைக் கண்டால் படிந்துவிடும். அது என்ன?
  71. ஓய்வு எடுக்காமல் இயங்கும். ஓய்வு எடுத்துவிட்டால் மறுபடியும் இயங்காது. அது என்ன?
  72. இருந்த இடத்தில் நகர்ந்தபடி இரவும் பகலும் செல்வான். அவன் யார்?
  73. பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. அது என்ன?
  74. பூ பூக்கும். காய் காய்க்கும். ஆனால் பழம் பழக்காது. அது என்ன?
  75. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார்?
  76. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?
  77. காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான் அவன் யார்?
  78. நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்?
  79. அம்மா போடும் வட்டம்,பளபளக்கும் வட்டம்,சுவையைக் கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன இஸ்டம். அது என்ன?
  80. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன?
  81. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. அது என்ன?
  82. அண்ணனின் தயவால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?
  83. குண்டன் குழியில் விழுவான், குச்சியப்பன் தூக்கி விடுவான் – அது என்ன?
  84. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
  85. பல் துவக்ககாதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்?
  86. ஊரெல்லாமல் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஒய்வு அது ?
  87. உங்களுக்கு சொந்தமானத ஒன்று…..ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?
  88. உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன?
  89. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன?
  90. எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன?
  91. வீட்டிலிருப்பான் காவலாலி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்?
  92. மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
  93. பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை. அது என்ன?
  94. விரல் இல்லாமலே ஒரு கை. அது என்ன?
  95. இவனும் ஒரு பேப்பர் தான்; ஆனால், மதிப்போடு இருப்பான். அது என்ன?
  96. இது ஒரு பூ. முதற்பகுதி ஆதவனின் மறுபெயர்; பிற்பகுதி தேசத் தந்தையை குறிக்கும். அது என்ன?
  97. ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல்படி. அது என்ன?
  98. ஓடுடுப்பான்! பிச்சை, ஒரு நாளும் கண்டறியான்!
    காடுறைவான்! தீர்த்தக்கரை சேர்வான்! – தேட
    நடக்குங்கால் நாலுண்டு!நல்தலை ஒன்றுண்டு!
    படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?
  99. வட்ட வட்ட நிலவில் வரைஞ்சிருக்கு; எழுதியிருக்கு. அது என்ன?
  100. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார்
  101. அரிவாளால் வெட்டி வெட்டி அடுப்பிலே வெச்சாலும் மூச்சே விட மாட்டான். அவன் யார்?
  102. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
  103. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?
  104. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?
  105. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
  106. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள், அவள் யார்?
  107. பா‌ர்‌க்க‌த்தா‌ன் கறுப்பு; ஆனா‌ல் உள்ளமோ சிவப்பு. நம‌க்கு‌த் தருவதோ சுறுசுறு‌ப்பு அது என்ன?
  108. பார்க்க அழகு பாம்புக்கு எதிரி அது என்ன?
  109. நடந்தவன் நின்றான் கத்தியை எடுத்து தலையைச் சீவினேன் மறுபடியும் நடந்தான் அவன் யார்?
  110. மேலே ஏறிச்செல்லும்:விமானம்
    அல்ல, தண்ணீர் உண்டு ;குளமும்
    அல்ல . அது என்ன?
  111. வரும் போது வெண்சிகப்பு!
    வளர வளர தகதகப்பு !
    போகும் போது கடும் சிகப்பு !
    அது என்ன?
  112. அட்டைக்கரிப் பெண்ணுக்கு உச்சந்தலை
    மஞ்சள் அது என்ன?
  113. ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது. அது எது?
  114. கடல் நீரில் வளர்ந்து நல்ல
    நீரில் மடிவது என்ன?
  115. முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?
  116. பாதாளத்திலிருந்து அரண்டு வேதாளம் வருகிறது – அது என்ன?
  117. வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?
  118. தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம்
    சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
  119. குண்டுச் சட்டியில் கெண்டை மீன், அது என்ன ?
  120. ஓடியாடி உழைத்தும், மூலைதான் இவன் இருப்பிடம் அது என்ன?
  121. எவ்வளவு முன்னேறுகிறீர்களோ அவ்வளவு விட்டுச் செல்வீர்கள். அது என்ன?
  122. என்னால் ஓட முடியும், ஆனால் நடக்க முடியாது; எப்போதாவது பாடுவேன், ஆனால் பேச முடியாது; கைகள் உண்டு, ஆனால் விரல்கள் கிடையாது; தலையில்லை, ஆனால் முகம் உண்டு; நான் யார் தெரியுமா?
  123. ஒரு மழை பெய்தாலே பல குடை வந்துவிடும் அது என்ன ?
  124. வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ அது என்ன?
  125. வாலால் நீர் குடிக்கும்,வயால் பூச்சொரியும் அது என்ன?
  126. பறக்கும். ஆனால் பறந்து போகாது. அது என்ன?
  127. மாவில் பழுத்த பழம். மக்கள் விரும்பும் பழம். அது என்ன?
  128. மட்டை உண்டு, கட்டை இல்லை. பூ உண்டு, மணம் இல்லை. அது என்ன?
  129. தண்ணீரோடு போகும் கல் எது?
  130. மருத்துவர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு அவர் யார்?
  131. தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன?
  132. காட்டில் கிடைத்த கட்டை கான மழை பொழிகிறது. அது என்ன?
  133. சிவப்பு ரோஜா மலர்ந்தால் வெள்ளை மலர்கள் தெரியும். அது என்ன?
  134. தலையில் கிரீடம் வைத்த தங்கப்பழம். அது என்ன?
  135. கையில்லாமல் நீந்துவான், கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?
  136. தரையில் முட்டி விடும்; விரலில் ஒட்டி விடும். அது என்ன?
  137. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
  138. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன?
  139. உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன?
  140. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
  141. காவி உடை அணியாதக் கள்ளத் தவசி கரையோரம் கடும் தவம் செய்கிறான் – அவன் யார்?
  142. காண உருவம் உண்டு கட்டிப்பிடிக்கத்தான் உடல் இல்லை -அது என்ன?
  143. விதையில்லாத செடி இது மழையில் பிறந்து வெயிலில் காயுது. – அது என்ன?
  144. இரவல் கிடைக்காதது இரவில் மட்டும்தான் வரும். -அது என்ன?
  145. பறந்து போகும் விமானம் அல்ல படீரென வெடிக்கும் பட்டாசும் அல்ல. -அது என்ன?
  146. குழந்தைக்குப் பலமான கையே இந்தக் கைதான். – அது என்ன?
  147. வாயில்லை புத்திமதிகள் சொல்வான், காலில்லை கடந்தும் செல்வான், கையில்லை உளங் காட்டிக் கொள்வான், உயிரில்லை ஒரு நாளும் சாக மாட்டான். – அது என்ன?
  148. கனலைப் பிடித்து கண்ணீர் வடிக்கும், கடைசியில் கரைந்தும் போகும் – அது என்ன?
  149. மேலே பறக்கும் பருந்தல்ல, கட்டுண்டு இருக்கும் மாடல்ல
    அழகான வாலுண்டு குரங்குமல்ல – அது என்ன?
  150. ஊர் உண்டு மக்களில்லை, மலையுண்டு மரங்களில்லை, ஆறுண்டு நீரில்லை, அணையுண்டு கல்லில்லை, வழி உண்டு வாகனமில்லை, வண்ணமுண்டு உயிரே இல்லை – அது என்ன?
  151. குடிக்கத் தண்ணீர் உண்டு, குளிக்கத் தண்ணீர் இல்லை – அது என்ன?
  152. மனிதன் போடாத பந்தலிலே, மலர்ந்து கிடைக்குது பூ – அது என்ன?
  153. காலும் கையும் உண்டு, விரல் இல்லை, முதுகு உண்டு, தலை இல்லை, தன்னைத் தேடி வந்தோரைச் சுமப்பான். – அது என்ன?
  154. எந்தச் சாவியாலும் திறக்க முடியாது, எந்தச் சுத்தியாலும் உடைக்க முடியாது?
  155. ஆற்றைக் கடக்கும், அக்கரை போகும், தண்ணீரில் கலக்காது, தானும் நனையாது – அது என்ன?
  156. வெயிலில் காயும், மழையில் நனையும், அண்டி வருவோர்க்கு, அடைக்கலமும் தரும் – அது என்ன?
  157. யாரும் செய்யாத கதவு, தானே திறக்கும் தானே மூடும் – அது என்ன?
  158. அழகான சின்னப் பெட்டி சத்தமிடும், சின்னப் பெட்டி தொட்டுக் காதில் வைத்து, விட்டால் பேச்சுச் சத்தம் கேட்கும் பெட்டி அது என்ன?
  159. எதிரில் ஒரு திரை எதையும் காட்டும் திரை விரலாலே வாசிக்க விடைதரும் திரை வியக்கும்படி எல்லாமே வழங்குகின்ற திரை?
  160. வரி வரியாய் கறுப்பு முத்து கையிலே வராத முத்து கண்ணிரண்டால் எடுத்து மனதால் மகிழ்ந்த முத்து அது என்ன?
  161. ஒட்ட வைத்த பம்பரம் இறக்கை வைத்த பம்பரம்
    சுற்றிச் சுற்றி சுகமளிக்கும் அழகான பம்பரம். அது என்ன?
  162. ராகத்துடன் பாடி வருவார் ராத்தூக்கம் கெடுப்பார். அவர் யார்?
  163. நீந்தத் தெரியும் மீனில்லை நடக்கத் தெரியும் மனிதனும் இல்லை இறக்கை இருந்தும் பறக்காத பறவை நான் யார் தெரியுமா?
  164. கறுப்பு நிறத்துக்குச் சொந்தக்காரன் கலகல பேச்சுக்காரன் ஒருவருக்குத் துயர் என்றால் ஊரையே அழைப்பான். அவன் யார்?
  165. பறக்கும் இது பறவை இல்லை. ஆனால் இது அடையாளம் காட்டிக் கொடுத்து விடும். அது என்ன?
  166. விழுந்தால் இது படுக்காது, நிமிர்ந்து எழுந்தால் நிற்காது. இது என்ன?
  167. தாகம் போக்கும் தண்ணீர் இல்லை. களைப்பைப் போக்கும் மருந்தும் இல்லை. சண்டைக்குச் செல்லும் இது ஆயுதமும் இல்லை. இது என்ன?
  168. தொட்டால் மணக்கும் கடித்தால் புளிக்கும். அறுத்துப் பிழிந்து தண்ணீர், சர்க்கரை சேர்த்து விட்டால் அடடா, சூப்பர் என்பார். யார் இது?
  169. முதுகில் சுமை தூக்கி முனங்காமல் வருவான். மூச்சும் திணறாது, முகமும் கோணாது. அவன் யார்?
  170. ஒன்பது பிள்ளையானாலும் ஒரே குடுமிதான் எங்களுக்கு நாங்கள் யார்?
  171. கடிக்காத புலி, கால் இல்லாப் புலி, உறுமாத புலி உருமாறும் புலி – அது என்ன?
  172. செடியில் விளையாத பஞ்சு, தறியில் நூற்காத நூல், உடுத்த முடியாத உடை- அது என்ன?
  173. வெறும் காற்றில் பருத்தவன், வரும்காற்றில் பறப்பான் – அது என்ன?
  174. படுத்திருக்கும் பெருநாகம், படம் எடுக்காத கருநாகம் – அது என்ன?
  175. ஒட்டுத் திண்ணையில் பட்டுப்பாவாடை-அது என்ன?
  176. கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள் காஞ்சியில் நான் யார்?
  177. பாடி பாடி அழைக்கும்,தேடி யாரும் செல்வதில்லை. அது என்ன?
  178. காட்டின் நடுவிலெ ஒரு பாதை. அது என்ன?
  179. ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல். அது என்ன?
  180. அண்ணனின் தயவால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?
  181. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?
  182. பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும், தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன?
  183. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
  184. பிறக்கும் போது வால் உண்டு; இறக்கும் போது வால் இல்லை. – அது என்ன?
  185. பச்சை கதவு, வெள்ளை ஜன்னல், திறந்தால் கருப்பு ராஜா – அது என்ன?
  186. காற்றால் உயிர் பெறும், காதுக்கு இனிமை தரும்- அது என்ன?
  187. ஊரெல்லாம் வம்பளப்பான்; ஓர் அறையில் அடங்குவான். அவன் யார்?
  188. ஆனை விரும்பும், சேனை விரும்பும்; அடித்தால் வலிக்கும், கடித்தால் இனிக்கும். அது என்ன?
  189. தண்ணீரில்லாத பொட்டலிலே தாவிச் செல்லும் கப்பல் எது?
  190. காம்பு இல்லாத வட்ட இலை – அது என்ன?
  191. பெயர்தான் பேப்பர்; ஆனால், செய்தி ஒன்றும் இருக்காது. யார் அவன்?
  192. தண்ணீரில் விரிக்கும் ஓட்டைப் பாய் – அது என்ன?
  193. தலை சாய்க்க மடி தருவான் பஞ்சு நண்பன் – அது என்ன?
  194. தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள் அது என்ன?
  195. சொன்னதைச் சொல்லும் பொண்ணுக்கு, பச்சைப் பாவாடை கேட்குதாம் அது என்ன?
  196. காலையில் ஊதும் சங்கு, கறி சமைக்க உதவும் சங்கு அது என்ன?
  197. காலைக்கடிக்கும் செருப்பல்ல, காவல் காக்கும் நாயல்ல அது என்ன?
  198. கோணல் எத்தனை இருந்தாலும் குணமும் குறியும் மாறாது – அது என்ன?
  199. காற்று இல்லாத கண்ணாடிக் கூண்டில் மஞ்சக் கோழி மயங்கி கிடக்குது அது என்ன?
  200. மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன?

 

 

விடுகதைகள் – விடைகள்

 

  1.  பட்டாசு
  2. அன்னாசிப் பழம்
  3. முடி
  4. நாய்
  5. தையல்காரர்
  6. படகு
  7. தண்ணீர்
  8. மிளகாய்
  9. குடை
  10. ஆமை
  11. சோளம்
  12. முத்திரை
  13. பஞ்சு
  14.  நெருப்பு
  15. சவப்பெட்டி
  16. தற்கொலை
  17. குயில்
  18. சிலந்தி
  19. காகம்
  20. பட்டுத்துணி
  21. வாழை
  22. விக்கல்
  23. நாற்காலி
  24. வெண்டிக்காய்
  25. வெங்காயம்
  26. முட்டை
  27. வானொலிப்பெட்டி
  28. சீப்பு
  29. இரகசியம்
  30.  நாளை
  31. விக்கல்
  32. உப்பு
  33. ஈசல்
  34. தொலைபேசி
  35. சோளக்கதிர்
  36. கண், மூக்கு.
  37. மேகம், மழை.
  38. மரம்-கரி-நெருப்பு.
  39. முதுகு.
  40. மஞ்சல்செடி.
  41. நாக்கு.
  42. அம்பு.
  43. படகு.
  44. பூரி.
  45. சோற்றுப்பானை-சோறு.
  46. சைக்கிள்
  47. பட்டாசு
  48. தராசு
  49. எறும்புக் கூட்டம்
  50. அஞ்சல் பெட்டி.
  51. தேங்காய்
  52. தலையணை
  53. குதிரை
  54. மீன் வலை
  55. ஆபத்து
  56. கண்கள்
  57. நிலா
  58. மூச்சு
  59. பட்டு
  60. ஒட்டகம்
  61. பாய்
  62. கை
  63. வெண்டிக்காய்
  64. தென்னை
  65. கண்
  66. தேன்
  67. நாக்கு
  68. சூரியன்
  69. தவளை
  70. முடி
  71. இதயம்
  72. கடிகாரம்
  73. வேர்கடலை
  74. தேங்காய்
  75. சிலந்தி
  76. அகப்பை
  77. தென்னை
  78. பென்சில்
  79. அப்பளம்
  80. கண்ணீர்
  81. செருப்பு
  82. சந்திரன்
  83. பணியாரம்
  84. தேள்
  85. சீப்பு
  86. சந்திரன்
  87. பெயர்
  88. தக்காளி
  89. கடல்
  90. மின் விசிறி
  91. பூட்டும் திறப்பும்
  92. விழுது
  93. வானொலி பெட்டி
  94. தும்பிக்கை
  95. பணம்
  96. சூரிய காந்தி
  97. மூக்கு
  98. ஆமை
  99. நாணயம்
  100. அலாரம்,கடிகாரம்
  101. விறகு
  102. சைக்கிள்,துவிச்சக்கரவண்டி
  103. எறும்பு
  104. தராசு
  105. வான வெடி
  106. செல்போன்/கைப்பேசி
  107. தேயிலை
  108. மயில்

Facebook Comments

 

27 Responses

  1. Ram

    June 22, 2019 9:41 am

    கடுகு அளவு சாமிக்கு தேங்காய் அளவு சாம்பிராணிக்கு என்ற விடுகதைக்கு பதில்

    Reply
  2. Habeeb

    December 16, 2019 3:52 am

    இல்லாத இட்லிக்கு இட்லி துணி இரண்டாயிரம் அது என்ன..?

    Answer pls

    Reply
  3. சரண்

    April 3, 2021 6:37 am

    விடுகதை :
    உயிருடன் இருக்கையில் புதைக்க படுகிறது
    இறந்த பின்பு எடுக்கப்படுகிறது அது என்ன

    Reply

Leave a Reply