மனிதர்கள் அவர்களுடைய நாவுகள் சம்பாதித்துக் கொண்டவைகளுக்காகவே முகம் குப்புற நரகில் வீசப்படுவார்கள். இறைத்தூதர்(ஸல்)
“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள். தெளிவான கூற்றைக் கூறுங்கள். அவன் உங்கள் செயல்களை சீர்படுத்தி உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பாடுகிறாரோ அவர் மகத்தான வெற்றியடைந்து விட்டார்” (அஹ்ஸாம்: 70- 71)
‘ஒருவனிடம் கண்காணித்து எழுதக்கூடியவர் இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை’. (அல்குர்ஆன் 50:18)
குறை சொல்லி புறம் பேசித்திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான். (அல்குர்ஆன் 104:1)
“நாவை விட அதிக காலம்” சிறை வைக்க வேண்டிய விடயம் உலகில் வேறெதுவுமில்லை” (அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி))
‘உன்னுடைய நாவை விட உன்னுடைய இரு காதுகளுக்குள்ள உரிமையை ஏற்றுக்கொள். உனக்கு இரு காதுகளும் ஒரு நாவும் வழங்கப்பட்டுள்ளது ஏனெனில் நீ பேசுவதை விட அதிகமாக செவிமடுப்பதற்காகத்தான்” அபூதர்தா (ரழி)
“நாவை அடக்கியாளுங்கள் -அதற்கு அதிகாரம் கொடுக்காதீர்கள். உங்கள் அதிகாரத்துக்குக் கீழே அது இயங்கட்டும். இதில்தான் வெற்றியுண்டு” இறைத்தூதர்(ஸல்)
“தன் நாவை ஒரு மனிதன் காத்துக் கொண்டால் அவன் மானத்தை இறைவன் காத்துக் கொள்வான்!”