உமர்(றழி) அவர்கள் தனது மகனின் ஒட்டகையொன்று சந்தையில் நிற்கக் கண்டார்கள். அதன் உடல் முன்னரைவிட சற்று பருத்திருந்தது. அதனை மேய்த்தவர் மிகவுமே சிறந்த புற்தரையில் அதனை மேய்த்திருக்கலாம், என்றும் கலீபாவின் மகனது ஒட்டகை என்பதற்காக இந்த வரப்பிரசாதத்தை அவர் ஒட்டகைக்குப் பெற்றுக் கொடுத்திருக்கலாம் என்றும் நினைத்தார்கள். அதாவது, அரச செல்வாக்கினால் இப்படி நடந்திருக்கலாம் என்பது அவர்களது கணிப்பாக இருந்தது, எனவே, அதனை விற்று அதன் பெறுமதியை பைத்துல்மாலில் சேர்த்துவிடும்படி அவர்கள் தனது மகனைப் பணித்தார்கள்.